நிதிச் சந்தைகளின் திறப்பு நேரத்தை ஏப்ரல் 18 ஆம் தேதி முதல், காலை 9 மணிக்கு தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக வர்த்தக நேரம் திருத்தப்பட்டது. தற்போது, கொரோனா பெருந்தொற்று அச்சம் குறைந்து வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் மற்றும் அலுவலகங்களின் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாடுகள் கணிசமாக தளர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நிதிச் சந்தைகளுக்கு தொற்றுநோய்க்கு முந்தைய நேரத்தை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதையடுத்து, இம்மாதம் 18 ஆம் தேதி முதல் நிதிச் சந்தைகளின் திறப்பு நேரம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.